மாயாவுக்காக சீனுவின் கல்யாணத்தை நிறுத்திய ரகுராம்..

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாருக்கு தான் முதலில் எல்லா சடங்குகளையும் செய்ய வேண்டும் என சாருவின் அப்பா உறுதியாக இருக்க ரகுராம் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது ரகுராம் ஐயர் சொன்னபடி மாயாவுக்கு தான் முதலில் சடங்கு செய்ய வேண்டும் என சொல்ல சாருவின் அப்பா முடியாது எல்லாத்தையும் சாருவுக்கு தான் செய்ய வேண்டும் என சொல்கிறார். ரகுராம் கோபப்பட்டு சாரு இந்த வீட்டு பொண்ணு அவளுக்கு தான் முதலில் செய்யணும் என்று சொல்கிறார்.

உடனே சாருவின் அப்பா முடியாது என்று மறுக்க அப்படின்னா இந்த கல்யாணம் நடக்காது என ரகுராம் அதிர்ச்சி கொடுக்கிறார். உடனே சாருவின் அப்பா அம்மா அவளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற ரகுராம் அவங்க போனா போகட்டும் நம்ம வீட்டு பொண்ணுங்களுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்க என சொல்கிறார்.

வெளியே வந்த சாரு நான் சீனுவை தான் காதலிக்கிறேன் எனக்கு அவர்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் என சொல்ல சாருவின் அப்பா அம்மா மீண்டும் ரகுராமிடம் பேச முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment