கரிகாலனின் கழுத்தை நெறித்த கதிர்! நடுநடுங்கிய தர்ஷினி

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

குணசேகரன் ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகளால் தர்ஷினி கடத்தப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து ஜீவானந்தம் காப்பாற்றிய நிலையில், பொலிசார் மீட்டு குணசேகரனிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் காட்டில் ஜீவானந்தம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், அவரது தற்போது நிலை என்ன என்பது தெரியவில்லை.

ஜாமீன் கிடைத்து ஈஸ்வரி வீட்டிற்கு வந்துள்ள நிலையில், தர்ஷினியை பார்க்கவிடாமல் அவரை தடுத்துள்ளனர். இதனிடையே கரிகாலன் தர்ஷினியை திருமணம் செய்து வைக்க கேட்கி்ன்றார்.

இதனால் கொதித்துப் போன ஞானம் மற்றும் கதிர் இருவரும் கரிகாலை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் தர்ஷினியை கரிகாலம் திருமணம் செய்வான் என்று குணசேகரன் கூறியுள்ளார்.

சமீபத்தில் சற்று விறுவிறுப்பான கதைகளம் தற்போது ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. கதையின் போக்கு இப்படியா மக்களை போர் அடிக்க வைக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment