ஆலு பராத்தா..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்

உருளைக்கிழங்கு – 4

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 1

நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

ஆம்சூர் பவுடர் – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

எண்ணெய் – தேவைக்கேற்ப

நெய் – தேவைக்கேற்ப

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு நன்றாக பிசைந்து அதன் மேல் எண்ணெய் தடவி பத்து பதினைந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பின்னர் உருளைக் கிழங்கை வேகவைத்து அதன் தோலை நீக்கி ஒரு பௌலில் போட்டு நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஆம்சூர் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவில் இருந்து கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்து தேய்த்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மூடி பராத்தாவை கொஞ்சம் மெலிதாக தேய்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தேவையென்றால் நெய் தடவி தேய்த்து வைத்துள்ள ஆலு பராத்தாவை போட்டு கொள்ளுங்கள்.

பராத்தா ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு நெய் தடவி சுட்டி எடுத்தால் மிகவும் சுவையான, மிருதுவான ஆலு பராத்தா சாப்பிட ரெடி…

Related Posts

Leave a Comment