மீண்டும் வேறொரு சிக்கலில் தர்ஷினி! குணசேகரனின் மாஸ்டர் பிளான்..

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தற்போதுள்ள கதைக்களத்தில் தர்ஷினி பெற்ற தந்தையால் கடத்தப்பட்டு சில ரவுடிகளால் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர்.

ரவுடிகளை பொலிசார் சுற்றி வளைத்த நிலையில், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவர்கள் குணசேகரன் சொல்லிக் கொடுத்த மாதிரியே ஜீவானந்தம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இது பொய் என்று ஒருபுறம் ஜனனி வாதாடிவரும் நிலையில், தர்ஷினி வேறொரு பிரச்சினையில் மாட்டியுள்ளார். இதிலிருந்து தர்ஷினி மீண்டு வருவது எப்படி என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment