பாக்கியாவின் ரெஸ்ட்ராண்ட் திறக்கப்படுமா? கோபி செய்த சதி

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருவதுடன், பாக்கியா அடுத்தடுத்து பல பிரச்சினைகளை கடந்து, தனது தொழிலிலும் அடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கோபி தனது தொழிலில் நஷ்டத்தை சந்தித்து வேலையில்லாமல் இருக்கும் நிலையில், பாக்கியா புதிய ஹொட்டல் ஒன்றினை தொடங்க உள்ளார். இதில் கோபியை மேனேஜர் போன்று பார்த்துக் கொள்ளக் கூறியுள்ளார்.

இதனால் கடுப்பில் ஆழ்ந்த கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்கியாவை சரமாரியாக சத்தம் போட்டனர். மேலும் கோபம் அடங்காத கோபி பாக்கியா ஹொட்டலை திறந்து வைக்க வரும் கலெக்டரை வரவிடாமல் தடுத்து பிளான் ஒன்றினை போட்டுள்ளார்.

இது தெரியாத பாக்கியா கலெக்டர் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

Related Posts

Leave a Comment