இன்று முதல் 7 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..

by Lifestyle Editor

இன்று முதல் 7 நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைக்காலம் மற்றும் குளிர் காலம் முடிவடைந்து கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கோடையின் ஆரம்பமே உக்கிரமாக இருக்கிறது என்பதும் மார்ச் 1 முதல் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வெப்பநிலையும் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Posts

Leave a Comment