பாண்டியன் ஸ்டோர்ஸ் பெண்ணை காப்பாற்றுவாரா பாக்கியா..

by Lifestyle Editor

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஆர்டர் செய்து கொடுக்க வந்த இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப பெண்ணை பின்தொடரும் நிலையில், இப்பெண்ணை எவ்வாறு காப்பாற்றப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

தற்போது பாக்கியாவிற்கு புதிய ஆர்டர் ஒன்றும் கிடைத்துள்ளது. இதனால் எழில் உடன் பாக்கியா சென்றுள்ள இடத்திற்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் வந்துள்ளது.

இரண்டு சீரியலின் மகா சங்கமம் தொடர் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஊரிலிருந்து காதலனுடன் எஸ்கேப் ஆன ராஜீ பாக்கியலட்சுமி கண்ணில் தென்படுகின்றார்.

இவ்வாறு தொடர்ந்து அப்பெண்ணை பார்க்கும்படியாக சந்தர்ப்பம் வந்துள்ள நிலையில், ராஜீயை குறித்த நபரிடமிருந்து எவ்வாறு பாக்கியா காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு பயங்கரமாகவே இருக்கின்றது.

Related Posts

Leave a Comment