‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகலா ?… ஆல்யா மானசா அளித்த விளக்கம் !

by Lifestyle Editor

‘ராஜா ராணி 2’ சீரியலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு நடிகை ஆல்யா மானசா விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ‘ராஜா ராணி 2’. குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் பிரச்சனை வைத்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வருபவர் நடிகை ஆல்யா மானசா. இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த சீரியலின் முதல் சீசனிலும் இவரே கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து அவருடன் சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு அய்லா சையத் என்ற பெண் குழந்தை இருக்கிறது. இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக ஆல்யா மானசா இருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு 7வது மாத வளைக்காப்பு நடைபெற்றது.

இன்னும் மூன்று மாதங்களில் குழந்தை பிறக்கவுள்ள நிலையில் சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா என ஆல்யா மானசாவிடம் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இன்ஸ்கிராம் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஆல்யா, எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள நடிகை ஆல்யா, ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்றும், சீரியலில் ஒரேயொரு சந்தியா தான் அது இந்த ஆல்யா மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக சீரியலில் இருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு ஆல்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment