ஜெயிலில் இருந்து தப்பித்த ஷண்முகம்; வைகுண்டத்தை தூக்கவந்த முத்துப்பாண்டி! அண்ணா சீரியல்

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் ஜெயிலில் இருந்து தப்பித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீட்டில் கனி அண்ணனை நினைத்து அழுது கொண்டிருக்க பரணிக்கு போன் செய்கிறார் முப்பிடாதி.

அப்போது ஷண்முகம் ஜெயிலில் இருந்து தாபித்த விஷயத்தை சொல்ல, அதை கேட்டு தங்கைகள் சந்தோசப்பட பரணி அவன் பெரிய தப்பு பண்ணிட்டான், இதுக்கு அப்புறம் தான் இந்த பிரச்சனையே பெருசாக போகுது என்று சொல்ல, முப்பிடாதி ஷண்முகம் தப்பித்தது தான் நல்லது, இல்லனா உங்க அண்ணன், அவனை ஒரு வழி பண்ணி இருப்பான் என்று சொல்லி போனை வைக்கிறார்.

விடியற்காலை 5 மணிக்கு யாரோ வீட்டின் கதவை தட்ட பரணி கதவை திறக்க, உள்ளே வந்த ஷண்முகம் எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு போடு என்று சொல்லி சாப்பிட, திரும்பவும் கதவை தட்டும் சத்தம் கேட்க ஷண்முகம் ஒளிந்து கொள்கிறான், பரணி கதவை திறக்க முத்துப்பாண்டி ஷண்முகம் எங்கே என்று கேட்க நீ தானே கூட்டிட்டு போன என்று பதில் சொல்கிறாள்.

அவன் ஸ்டேஷனலில் இருந்து தப்பித்து விட்டான் என்று சொல்லி வைகுண்டத்தை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்ல முடிவு செய்ய பரணி நான் தான் அவன் பொண்டாட்டி வேணும்னா என்னை கூட்டிட்டு போ என்று பரணி ஷாக் கொடுக்க, முத்துப்பாண்டி அவனை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.

முத்துப்பாண்டி பேசியதை எல்லாம் கேட்டு ஷண்முகம் கோபத்தில் இருக்க, பரணி உன்னால் எவ்வளவு பிரச்சனை பார்த்தாயா என்று திட்டுகிறாள். உன்மேல எந்த தப்பும் இல்லனு நிரூபி, அதுவரைக்கும் உன்னுடைய அப்பா, தங்கச்சி என மொத்த குடும்பத்துக்கும் பிரச்சனை தான் என்று சொல்ல, ஷண்முகம் சரி என்று அங்கிருந்து கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment