பொய் சொல்லி மாட்டிக் கொண்ட கோபி.. பாக்கியாவுக்கு வந்த முதல் சந்தேகம்!

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் அடுக்கடுக்கான கேள்விகளால் கோபிக்கு பயம் வர, பொய்க்கு மேல் பொய் சொல்லி மாட்டிக் கொள்கிறார்.

ராதிகா விஷயத்தில் கோபி பொய் சொல்வதை முதன்முறையாக பாக்கியா கண்டுபிடித்துவிட்டார். இத்தனை நாட்களாக கோபி சொல்வது எல்லாம் உண்மை என நினைத்துக் கொண்டிருந்த பாக்கியாவுக்கு இன்றைய எபிசோடில் முதல் சந்தேகம் வருகிறது. இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு சுருக்கமாக உங்கள் பார்வைக்கு.

பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பிரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் டி.ஆர். பி ரேட்டிங் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை ஒரங்கட்டியுள்ளது. இதற்கு காரணம், திரைக்கதையில் இருக்கும் கூடுதல் விறுவிறுப்பு தான். கோபியின் அப்பா, ராமமூர்த்திக்கு கோபி – ராதிகா பற்றிய விஷயம் தெரிந்ததில் இருந்து சீரியலில் தினமும் ஒரு ட்விஸ்ட், பரபரப்பான திரைக்கதை என பாக்கியலட்சுமி சீரியலை இயக்குனர் டாப் கியரில் எடுத்து சென்று கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோடில் பாக்கியாவுக்கு கோபி மீது சந்தேகம் வரும் காட்சிகள் இடம்பெறுகின்றன. ராதிகா வீட்டு வாசலில் கோபியின் காரை பார்த்த பாக்கியாவுக்கு, ஏதோ ஒரு தப்பு இருக்கிறது என்பது நன்கு தெரிகிறது. அந்த நேரம் பார்த்து செல்வி அக்கா, ராதிகாவின் பாய் ஃபிரண்ட் ஏன் கோபியாக இருக்க கூடாது? அப்படின்னு சந்தேகத்தை தூவ பாக்கியா கோபத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால் அவர் மனதிலும் அந்த சந்தேகம் இல்லாமல் இல்லை. இப்படி இருக்கையில், இன்று வீட்டுக்கு வரும் கோபியிடம் பாக்கியா சில கேள்விகளை கேட்கிறார்.

நீங்க இன்னிக்கு எங்க இருந்தீங்க? உங்க கார் எங்க? இப்படி பாக்கியாவின் அடுக்கடுக்கான கேள்விகளால் கோபிக்கு பயம் வர, பொய்க்கு மேல் பொய் சொல்லி மாட்டிக் கொள்கிறார். வழக்கம் போல் ஏதோ ஏதோ சொல்லி எஸ்கேப் ஆகுகிறார். ஆனால் இந்த முறை பாக்கியா அதை நம்பவில்லை என்பது கோபிக்கு தெரிகிறது. ஒருவேளை செல்வி அக்கா சொன்னது உண்மையாக இருக்குமா? என்ற சந்தேகம் பாக்கியாவுக்கு வருகிறது. இதைப்பற்றி தனது செல்ல மகன், எழிலிடமும் சொல்கிறார். அதற்கு எழில், அந்த பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். கோபி பற்றிய சந்தேகம் எழிலுக்கு ஏற்கெனவே இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த கார் விஷயம் எல்லோரையும் யோசிக்க வைக்கிறது.

வீட்டில் எல்லோருக்கும் சந்தேகம் வந்து விட்டது, குறிப்பாக பாக்கியாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது என்பதை அறிந்த கோபி ஒரு மகா நாடகத்தை அரங்கேற்றுக்கிறார். அதுகுறித்து நாளை தெரிய வரும்.

Related Posts

Leave a Comment