மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதிர்… எதிர்நீச்சலின் எதிர்பாராத திருப்பம்..

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை தெரியவந்ததிலிருந்து குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர்.

குணசேகரன் மறைவிற்கு பின்பு இறங்கிய டிஆர்பி-யை ஏற்ற பல வழிகளில் சீரியல் குழுவினர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கதிர் மீது வன்மத்துடன் இருந்த ஜீவானந்தத்தின் ஆட்கள் இந்த முறையும் அவரை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆபத்தான நிலையில் கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்பொழுதும் கதிர் அம்மா நந்தினியை சரமாரியாக பேசி வருகின்றார். இந்த சம்பவத்திற்கு பின்பாவது கதிர் திருந்துவாரா என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment