கொண்டாட்டத்தில் இறங்கிய பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர் ..

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. அருண் மற்றும் ரோஷினி முக்கிய நடிகர்களாக நடிக்க ஆரம்பிக்க சீரியல் சூப்பராக ஆரம்பத்தில் ஓடியது.

பின் ஒரே டுவிஸ்ட்டை வைத்து கதையை சீரியல் குழு இழுக்க ரசிகர்கள் கொஞ்சம் புலம்ப ஆரம்பித்தார்கள்.

தயவுசெய்து சீரியலை முடித்து விடுங்கள், இழுக்காதீர்கள் என கெஞ்சி வந்தார்கள். ஆனால் இயக்குனர் முடிப்பதாக தெரியவில்லை, ஏதேதோ கதைகளை உள்ளே புகுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் பாரதி கண்ணம்மா சீரியல் 1000வது எபிசோடை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர், அந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment