தாலிக்காக அமுதாவிடம் முத்தம் கேட்கும் கண்ணன் – அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட் !

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். அமுதா வருவதற்குள் ஏலம் முடித்திருக்க உமா இதனால் அவளை கலாய்த்த நிலையில், இன்றைய எபிசோடில் அமுதா அடகு கடைக்காரனிடம் நீ சொன்ன நேரத்துக்கு முன்னாடியே ஏன் ஏலம் விட்டீங்க என சண்டை போடுகிறாள்.

அடுத்து உமா வேணும்னா நீ சாட்சிக்காரன் காலில் விழு என சொல்ல அமுதா பார்க்க கண்ணன் அங்கு இருக்கிறான். அமுதா கண்ணனிடம் என் அத்தையோட தாலி இது கண்டிப்பா எனக்கு வேணும் எவ்வளவு பணம் வேணாலும் தர்றேன் என கெஞ்ச, ஏலத்தில் எடுத்ததை அப்படி எல்லாம் தர முடியாது என கண்ணன் சொல்ல, அமுதா அவனிடம் கொஞ்சுகிறாள்.

அதை ரசித்தபடி கண்ணன் ஒவ்வொன்றாக சொல்லி செய்ய வைக்க தாலிக்காக அமுதா அனைத்தையும் செய்ய கடைசியில் கண்ணன் அமுதாவிடம் கன்னத்தில் முத்தம் கேட்க, அமுதா அவனை கன்னத்தில் அறைகிறாள். இதனால் கண்ணன் தாலியை உருக்கி விடுகிறேன் என மிரட்டுகிறாள்.

பின்னர் வீட்டுக்கு வந்ததும் கண்ணனும் கோமதியும் நாகுவிடம் நீ சொன்ன மாதிரி செஞ்சிட்டோம் என சொல்ல, நாகு ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க, கோமதி நாகுவை தொட்டுப் பார்க்க, உடல் வேர்த்து ஜில்லென்று இருக்க, கோமதி அதைப் பற்றி கேக்க அவள் எதுவும் பேசமால் இருக்கிறாள், இந்த நேரத்தில் கண்ணனும், கோமதியும் புரியாமல் பார்க்க, கதவிற்கு பின்னால் இருந்து இளங்கோ வருகிறான். எல்லா விஷயத்தையும் அறிந்த இளங்கோ பெல்ட்டால் கண்ணனை அடி வெளுக்கிறான்.

அடுத்து அமுதா வீட்டில் நடந்ததை சொல்லி அழும் போது இளங்கோ வருகிறான். இளங்கோ தாலியை அவளிடம் கொடுக்க அமுதா இளங்கோவை அணைத்துக் கொண்டு அழுகிறாள். அடுத்து இளங்கோ கிளம்பும் போது அமுதா தாலிக்கான பணத்தை அவனிடம் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment