பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடி மாற்றம்..

by Lifestyle Editor

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் போட்டியாளர்கள் செய்யும் வேலைகள் குறித்து கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து திங்கட்கிழமை காலை முதல் அர்ச்சனா மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் தன்னை மாற்றிக் கொண்டுள்ளதாக கேமரா மற்றும் போட்டியாளர்களிடம் கூறுகின்றனர்.

இவர்களின் மாற்றத்தை பிக்பாஸ் வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இது தொடர்பாக இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் நிக்ஷன் – விஷ்ணுவிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இனி வரும் நாட்களில் இவர்களின் விளையாட்டு எப்படி இருக்க போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment