வனிதாவின் குரலாக மாறிய தாமரை.. அக்கப்போரான பிக்பாஸ் வீடு

by Column Editor

வனிதாவின் குரலாக மாறி தாமரை பேசும் ப்ரோமோ வெளியாகி பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக்கியுள்ளது.

ஊ சொல்றியா.. ஊம் சொல்றியா 2.O. என்ற புதிய டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே போட்டியாளர்கள் தங்கள் நண்பர் யார்.. யாருடன் ஒத்துபோகவில்லை என்பதை தெரியப்படுத்தினார்கள். அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் அதை தெரியப்படுத்த அடுத்து வாய்ப்பு அளிக்கும் ப்ரோமோ வெளியானது. அதில் பிடிக்கும், பிடிக்காத நண்பர்களை போட்டியாளர்கள் தேர்வு செய்யும் காட்சிகள் வெளியானது.

இந்நிலையி​ல் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ஒருவர் குரலாக மற்றவர் மாறுகின்றனர். முதலில் தாமரை அபிராமியின் குரலாக மாறி பேசு வருகிறார். அப்போது பேசும் பிக்பாஸ், இதுவரை அபிராமியின் குரலாக பேசியது போதும் என்றும், இனி வனிதாவின் குரலாக மாறி ஒலிக்கவேண்டும் என்று அறிவிக்கிறார்.

அப்போது பேசும் வனிதா, நினைத்தேன் தாமரை, நீ செத்தாய் என்கிறார். இதையடுத்து வனிதாவின் குரலாக மாறும் தாமரை, அவர் பேசுவது போன்றே பேசி வருகிறார். இதனால் பிக்பாஸ் வீடே கலகலப்பாய் மாறி விடுகிறது.

Related Posts

Leave a Comment