விசா தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை !

by Lifestyle Editor

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு விசா தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்குக் கரையில் அமைதி, பாதுகாப்பு அல்லது ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கே விசா தடையை அமுல்படுத்தவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் நடத்தும் வன்முறையை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா பலமுறை வலியறுத்தியது.

Related Posts

Leave a Comment