போலீஸ் ஸ்டேஷனில் கதிர்.. என்ன செய்ய போகிறார் மூர்த்தி, பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வாரம் ப்ரோமோ

by Lifestyle Editor

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் வங்கி ஊழியர்கள் கண்ணனை அடித்ததால், கதிர் அந்த வங்கி ஊழியர்களை அடித்தார்.

இதனால் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார் கதிர். கண்ணனால் தான் இப்படி நடந்தது என தெரிந்ததும் மூர்த்தி மற்றும் ஜீவா இருவரும் கண்ணன் மீது செம கோபத்தில் இருக்கிறார்கள்.

ப்ரோமோ வீடியோ

இந்நிலையில், அடுத்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்கவிருப்பதை குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதன்படி, ரூ. 5 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தினால் கொடுத்த கேஸை வாப்பஸ் வாங்கி விடுகிறோம் என வங்கி நிருவாகம் கூறுகிறது.

பணத்தை ஏற்பாடு செய்து வங்கியில் கட்டி தனது தம்பி கதிரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே கூட்டி வருகிறார் மூர்த்தி.

Related Posts

Leave a Comment