பங்குச் சந்தைகளில் களைகட்டிய பங்கு வர்த்தகம் ..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 710 புள்ளிகள் உயர்ந்தது.

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்கி குவித்தது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், உலக பங்குச் சந்தைகள் வர்த்தகம் சிறப்பாக இருந்தது, நிறுவனங்களின் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள், வங்கி பங்குகள் விலை உயர்வு, அடுத்த 2-4 காலாண்டுகளில் உள்நாட்டில் நுகர்வு அதிகரிக்கும் என்ற மதிப்பீடு போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், நெஸ்லே இந்தியா, எல் அண்ட் டி மற்றும் சன்பார்மா ஆகிய 3 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,078 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,568 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.276.09 லட்சம் கோடியாக இருந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.33 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 709.96 புள்ளிகள் உயர்ந்து 61,764.25 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 195.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,264.40 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment