சென்செக்ஸ் 879 புள்ளிகள் வீழ்ச்சி.

by Lifestyle Editor

கடந்த 2 தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்கு வர்த்தகம் இன்று கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 879 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகித உயர்வு நடவடிக்கை எதிர்பார்த்ததை காட்டிலும் நீண்ட காலத்துக்கு மேற்கொள்ளலாம் என்ற தகவல் இந்திய பங்குச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன் பார்மா மற்றும் என்.டி.பி.சி. ஆகிய 2 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 28 நிறுவன பங்குகளின் விலையும் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,408 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,151நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 121 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.288.38 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.2.83 லட்சம் கோடி நஷ்ம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 878.88 புள்ளிகள் குறைந்து 61,799.03 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 245.40 புள்ளிகள் சரிவு கண்டு 18,414.90 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment