கார்த்தியின் கல்யாணத்துக்கு வந்த சாமுண்டீஸ்வரி ..

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கார்த்தியின் கல்யாண ஊர்வலம் தொடங்கி நடக்க மீனாட்சி கார்த்தியின் பக்கத்தில் தீபா உட்கார்ந்து இருப்பது போல நினைத்து சந்தோஷப்படுகிறாள்.

அடுத்து ஊர்வலம் சென்று கொண்டிருக்கும் போது தீபா தன்னுடைய தோழியுடன் துணி கடைக்கு வர அப்போது இதை பார்த்து அதிர்ச்சியோடு நிற்கிறாள். இந்த கல்யாணம் நடக்கக்கூடாது கடவுள் கண்டிப்பா இதை நிறுத்துவார் என தீபா கடவுளிடம் வேண்டுகிறாள்.

தீபாவை பார்த்த நட்சத்திரா ஐஸ்வர்யாவுக்கு சைகை கொடுக்க இருவரும் தீபாவை ஏளனமாக பார்க்கின்றனர். அதன் பிறகு ஊர்வலம் அப்படியே நகர்ந்து செல்ல 4 பாடிகார்ட்டுகளுடன் காரில் மாசாக வந்து இறங்கி அபிராமி உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார் சாமுண்டீஸ்வரி ( வனிதா விஜயகுமார்).

ஏற்கனவே இவர் மகள் அருணா என்றவரை கார்த்திக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில் அபிராமி அதனை நிராகரித்ததால் சாமுண்டீஸ்வரிக்கு பத்திரிக்கை கொடுக்காமல் விட்டு இருந்தாள்.

இப்படியான நிலையில் சாமுண்டீஸ்வரி வந்து இறங்க அனைவரும் அதிர்ச்சியாக அவர் நான் கல்யாணத்தை நிறுத்த வரல நான் பழசு எல்லாம் அப்பவே மறந்துட்டேன் எனக்கும் கார்த்தியோட கல்யாணத்தை பார்க்க ஆசை என சொல்லி கல்யாண ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்.

Related Posts

Leave a Comment