ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா .. பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் …

by Lifestyle Editor

போதைக்கு அடிமையான கோபியிடம் சண்டை போட்டுவிட்டு ராதிகா சென்றுவிட்டார். அதன் பின் கோபி குடிபோதையில் தள்ளாடுவதை பார்த்து செழியன் அவரை பாக்யாவின் வீட்டுக்கு கொண்டு சென்றுவிடுகிறார்.

அதன் பின் கோபி அங்கேயே இருக்க வேண்டும் என பாட்டி கூறுகிறார். ஆனால் கோபி தான் ராதிகா உடன் தான் இருக்க வேண்டும் என கூறுகிறார்.

அதன் பின் ராதிகாவின் அம்மா கொடுத்த அட்வைஸ் காரணமாக ராதிகா பையை தூக்கிக்கொண்டு கோபி இருக்கும் வீட்டுக்கே சென்றுவிடுகிறார்.

“நீங்க இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன்” என கோபியிடம் கூறி ஷாக் கொடுக்கிறார். இது நடந்தால் பாக்யா மற்றும் ராதிகா இருவரும் ஒரே வீட்டில் நேருக்கு நேர் அடிக்கடி சண்டை போடும் நிலை வரலாம்.

Related Posts

Leave a Comment