வடகொரியா ஏவுகணை சோதனை ஜப்பான் எல்லையில் பதற்றம் ..

by Lifestyle Editor

ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தவுள்ளதகாக எச்சரிக்கை தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து, ஜப்பான் அரசாங்கம் ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது.

இது குறித்து ஜப்பான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில், தகவலை சேகரிக்க மற்றும் ஆய்வு செய்ய முடிந்த வரையிலான முயற்சியில் ஈடுபட அர்ப்பணிப்புடன் செயல்படவும்.

பொதுமக்களுக்கு விரைவான, போதிய தகவலை வழங்கவும் விமானம், கப்பல் மற்றும் பிற பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும். வருங்காலத்தில் நிகழ கூடிய அனைத்து விசயங்களுக்கும் தயாராவது உட்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளது.

விலக்கப்பட்ட எச்சரிக்கை :

இந்த நிலையில், அந்த ஏவுகணை வடகொரியாவுக்கு கிழக்கே கடலில் விழுந்து இருக்க கூடும் என ஜப்பானின் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

மேலும், தி கார்டியன் வெளியிட்ட ஊடக அறிக்கையில், ஹொக்கைடோ தீவை ஏவுகணை தாக்க கூடிய சாத்தியம் இல்லை என உள்ளூர் அதிகாரிகளும் தெளிவுப்படுத்திள்ளனர் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment