மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம்

by Lifestyle Editor

பாக்யலட்சுமியில் அடுத்த திருப்பம்

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்துபோன கோபி தண்ணியடித்துவிட்டு தெருவில் கிடந்தார்.

அவரை முன்னாள் மனைவி பாக்கியா தான் வீட்டிற்கு கொண்டு வந்தது சேர்த்தார். இதனால் ராதிகா செம கடுப்பானார். இதன்பின் போதையில் இருந்த கோபி ராதிகாவை திட்டி பேசினார்.

கோபி தன்னை இப்படி பேசியதால் வீட்டை விட்டு வெளியேற ராதிகா முடிவு செய்தார். ஆனால், கோபி ராதிகாவிடம் தெருவில் கெஞ்சினார். இந்நிலையில், வரும் வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி

இதில் கோபி தாய் கோபியிடம் சென்று மீண்டும் நம்முடைய வீட்டிற்கு வந்துவிடு என கேட்கிறார். இதை ஓரமாக நின்று பார்க்கும் ராதிகா அதிர்ச்சியடைகிறார்.

இதன்பின் பாக்கியாவை சந்திக்கும் ராதிகா, மீண்டும் கோபியுடன் சேர்ந்து வாழ போறீங்களா பாக்கியா என கேட்க பாக்கியா செம கோபமடைகிறார்.

இதன்பின், ‘நான் தூக்கி எறிந்த வாழ்க்கையை தான் நீங்க இப்போ வாழ்த்து கொண்டு இருக்கீங்க’ என கூறினார். இதனால் ராதிகாவும் கோபத்தின் உச்சிக்கு செல்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம், இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்க போகிறது என்று.

Related Posts

Leave a Comment