கொலை கேஸில் கைதான மாரி.. சூர்யா எடுத்த முடிவு – மாரி சீரியல் அப்டேட் …

by Lifestyle Editor

கொலை கேஸில் கைதான மாரி, சூர்யா எடுத்த முடிவால் ஷாக்கான குடும்பம் என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் பிரியாவும் மாரியும் பணத்தைக் கொண்டு குடோனுக்கு செல்ல ஸ்ரீஜா இதுவரையும் பின் தொடர்ந்து பின்னே போகிறாள். உள்ளே சென்று அவனிடம் பணத்தை கொடுத்து ஃபோனில் உள்ள போட்டோவை டெலிட் பண்ண சொல்ல அவன் பணத்தை செக் செய்ய பணம் இல்லாமல் இருப்பதால் மாரி மற்றும் பிரியா அதிர்ச்சி அடைகிறார்கள்.

உடனே அவன் என்னையா ஏமாற்றுகிறாய் என்று சொல்லி பிரியாவை அடிக்கப் போக அப்போது பிரியாவை காப்பாற்ற மாரி ஒரு கட்டையால் அவனை அடிக்க அவன் ரத்த வெள்ளத்தில் விழுகிறான். தொட்டுப் பார்க்க இறந்து விட்டான் என்று பிரியா சொல்ல மாரி அதிர்ச்சி அடைகிறாள்.

இதை பார்க்கும் ஸ்ரீஜா உடனே போலீசுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல போலீஸ் வந்து மாரியை கைது செய்து அழைத்துச் செல்ல ஸ்ரீஜா வீட்டிக்கு சென்று அனைவரிடமும் மாரி குடும்ப மானத்தை வாங்கி விட்டாள் போலீஸ் கைது செய்து விட்டது என்று மாரியை அசிங்கப்படுத்த பிரியா வேகமாக சென்று சூர்யாவிடம் நடந்த விஷயத்தை கூறுகிறாள்.

ஹாசினி தன் அண்ணன் விக்ரமிடம் நடந்த விஷயத்தை கூற விக்ரம் இறந்தவனின் பெற்றோரை கொண்டு விசாரிக்க அவன் இறக்கவில்லை ஹாஸ்பிடல் உயிருடன் இருக்கிறான் என்ற விஷயத்தை தெரிந்து கொண்டு அவன் அப்பா அம்மாவை அழைத்து வருகிறான். சூர்யாவும் அங்கு வர இருவரும் ஸ்டேஷனில் விஷயத்தை சொல்லி மாரி நல்லவள் என்று சொல்லி வெளியே கொண்டு வருகின்றனர்.

அடுத்து நடக்கப் போவது என்ன? கைதான மாரியை தாரா வீட்டுக்குள் சேர்ப்பாளா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment