பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா ..

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களுக்கு மேல் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். அண்ணன்-தம்பிகளை வைத்தே இத்தனை வருடங்கள் கதையை நகர்த்தியுள்ளனர்.

இந்த தொடர் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அவர்கள் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள், ஆனால் தமிழில் ஹிட்டாக ஓடுகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அண்ணன்-தம்பிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். ஜீவா மாமனார் வீட்டில் தங்க, கண்ணன் தனியாக வீட்டில் இருக்கிறார்.

அடுத்து கதைக்களத்தில் ஜீவா மாமனாரை நன்றாக புரிந்துகொண்டு அவர் தன்னை ஏமாற்றியுள்ளார் என்பதை புரிந்துகொண்டு அண்ணனிடம் அவர் திரும்பி வருவார் என்றும் கண்ணன் பாசத்தின் பேரில் அண்ணனிடம் வருவார் என்றும் கூறப்படுகிறது.

அப்படியே அண்ணன்-தம்பிகள் ஒன்றாக வர தொடரும் முடிவுக்கு வரும் என்கின்றனர். வரும் ஜுன் மாதத்தில் தொடர் முடிவுக்கு வரும் என ஒரு தகவல் அதிகம் பரவுகிறது.

Related Posts

Leave a Comment