சுடிதாருடன் வந்த பாக்கியா பாக்கியலட்சுமி சீரியல் …

by Lifestyle Editor

இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் விட்ட சவாலை நிறைவேற்றத் துடிக்கும் பெண்ணாக காண்பித்து வருகிறார்கள்.

கோபியிடம் விட்ட சவாலை வெல்லவதற்காக திருமண ஆர்டர்களை எடுத்து சமைத்து அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு வீட்டையும் சவாலையும் சமாளித்து வருகிறார்.

இவரின் எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் ராதிகா. பாக்கியாவின் தோழியாக இருந்த ராதிகா கோபியால் பாக்யாவிற்கு எதிரியாக மாறிவிட்டார்.

தற்போது ஆங்கிலம் படிக்கப் போகும் பாக்யா, அங்கு பழனிச்சாமியுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து வயிறு எரிந்துக் கொண்டிருக்கிறார் கோபி, நாளுக்கு நாள் பாக்யா நிறைய விடயங்களைக் கற்று வளர்ந்துக் கொண்டே வருகிறார்.

சுடிதாருடன் வந்த பக்யா :

முந்தைய தொடரில் ராதிகா சமைக்க வரும் அனைவரும் சேலைக் கட்டக் கூடாது எனவும் அனைவரும் சுடிதார் தான் அனிய வேண்டும் என ஆர்டர் போட்டார்.

இதற்கிணங்க பாக்கியாவும் சுடிதார் அணிய வேண்டும் என சொல்ல சுடிதார் ஒரே மாதிரியான சுடிதார்கள் வீட்டிற்கு வந்திறங்கியது முதலில் செல்வி அதை அணிந்து வர அடுத்ததாக பாக்யாவை உடுத்தி வர சொல்ல பாக்கியா சுடிதார் எப்படி போட்டுட்டு போறது என யோசனையில் இருக்க அமிர்தா மற்றும் ஜெனி உள்ளிட்டோர் பாக்யாவை சமாளித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment