சொத்தை பிரிக்க போன சிதம்பரத்திற்கு அமுதா கொடுத்த அதிர்ச்சி – அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட் …

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் சிதம்பரம் சொத்தை பிரித்து எழுதி கையெழுத்து போடப் போக, அமுதா நிறுத்துங்க என சொல்லி வக்கீலுடன் உள்ளே வருகிறாள்‌. சொத்தை பிரிக்க ஸ்டே ஆர்டர் வாங்கி இருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

குடும்பத்தில் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க காரில் சிதம்பரத்தில் அம்மா வந்து இறங்குகிறார். இது நான் சம்பாதிச்ச சொத்து என்ன கேட்காம நீ எப்படி சொத்தை பிரிக்கலாம் என சொல்லி அவரும் அதிர்ச்சி கொடுக்கிறார். பொங்கலுக்கு எல்லாரும் என் வீட்டுக்கு வாங்க, அங்க வைச்சு என்ன பண்ணனும்னு நான் சொல்றேன் என சொல்கிறார்.

பிறகு உமா அப்பத்தா, நீங்க ஏன் சொத்தை பிரிக்கிறதை நிறுத்துனீங்க, அவளை ஏன் பொங்கலுக்கு வரச் சொன்னீங்க, அவ கல்யாணம் முறையாவே நடக்கல என அமுதா வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயத்தையும் சொல்கிறாள். பொங்கலுக்கு அவ வரட்டும் நீ சொல்றதெல்லாம் உண்மையாய் இருந்தால் அவளை பிரித்து நானே இந்த வீட்டுக்கு கொண்டு வருகிறேன் என அப்பத்தா வாக்கு கொடுக்கிறார்.

மேலும் நாகு இளங்கோவிடம் உங்க தங்கச்சிக்காக அம்புட்டு குதி குதிச்சீகளே , நொங்க தங்கச்சி இப்ப என்ன பண்ணுனா பார்த்தீகல்ல, வக்கீல் நோட்டீசு குடுத்து சொத்தை பிரிக்க விடாம பண்ணிபுட்டா, இன்னும் உங்க தங்கச்சியை நம்புனீங்க உங்களுக்கு சொத்துல ஒரு பைசா கிடைக்காது என திட்டி விட்டு செல்கிறாள்.

அடுத்து அமுதா இளங்கோவிடம் தான் வக்கீல் நோட்டீசு குடுத்தது சும்மா தான், நாளைக்கே அதை வாபஸ் வாங்கிருவேன்.. உமா நம்ம அப்புச்சி சொத்தை பிரிச்சி அந்த வீட்டுக்கு குடுக்கலாம்னு பார்க்குறா.. அவங்க நல்லவங்க இல்லன்னே.. நம்ம வீட்டு சொத்து கெட்டவங்க கைக்கு போகக்கூடாது என சொல்கிறாள்.

அதுமட்டுமல்லாமல் இந்த சொத்துல உனக்கு முழு உரிமை இருக்கு, நான் உன் கிட்ட எதிர்பார்க்குறது சொத்து இல்ல, என் பிள்ளைகளுக்கு தாய்மாமன்ங்குற உரிமை.. அது என்னைக்கும் நீடிச்சிருக்கனும்னு நான் நினைக்கிறேன் எனக்கு நீ முக்கியம்னே என சொல்கிறாள்.

பிறகு அமுதா அப்பத்தாவிடம் விடைபெற்று கிளம்ப, அமுதாவை அவளை கிளம்ப வேண்டாம் என சொல்வது.. அன்னலட்சுமி அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க என் பேத்தியை, பொய் சொல்லி உன் மகன் என் பேத்தியை கல்யாணம் பண்ணிருக்கான், உன் மூத்த மருமகன் பொறுப்பில்லாம உன் வீட்டுலயே இருக்கான், உன் இளைய பையன் ஊரெல்லாம் வம்பு பண்ணிட்டு திரியுறான், உன் தம்பி எந்த வேலை வெட்டியும் பார்க்காம உன் வீட்டுல தான் இருக்கான்.

இப்படி உன் குடும்பத்துல ஒருத்தன் உருப்படி கிடையாது, இப்படிப்பட்ட வீட்டுல என் பேத்தி எப்படி நிம்மதியா வாழ முடியும் என சொல்ல, அன்னலட்சுமி அவ என் மருமக என் வீட்டுல தான் இருக்கனும் என சொல்கிறாள்.

உடனே அப்பத்தா உன் மருமக உனக்கு வேணும்னா நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு பொங்கலுக்கு வாங்க, அங்க வந்து நாங்க நல்ல குடும்பம் தான், என் பேத்தியை நல்லா பார்த்துக்குவோம்னு உறுதி குடுங்க, அப்படி நீங்க நிரூபிக்கலனா என் பேத்தி உங்க கூட திரும்ப வர மாட்டா என சொல்ல, அன்னலட்சுமி அப்பத்தாவிடம் நாங்க உங்க வீட்டுக்கு வர்றோம் , எங்க குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம்னு நிரூபிச்சி என் மருமகளை என்னோட கூட்டிட்டு போறேன் என சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment