சென்செக்ஸ் 637 புள்ளிகள் வீழ்ச்சி ..

by Lifestyle Editor

ந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் 637 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, அமெரிக்க பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் பலத்த சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி சுசுகி இந்தியா மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய 2 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 28 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,231 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,264 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 132 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.71 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.2.93 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 636.75 புள்ளிகள் குறைந்து 60,657.45 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 189.60 புள்ளிகள் சரிவு கண்டு 18,042.95 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment