சென்செக்ஸ் 51 புள்ளிகள் சரிவு ..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 51 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்ட போதிலும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,825 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,755 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 206 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.288.46 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.74 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது .

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 51.10 புள்ளிகள் குறைந்து 62,130.57 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 0.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,497.15 புள்ளிகளில் முடிவுற்றது .

Related Posts

Leave a Comment