தொடர்ந்து 8வது வர்த்தக தினமாக காளையின் ஆதிக்கம் .. சென்செக்ஸ் 185 புள்ளிகள் உயர்வு ..

by Lifestyle Editor

தொடர்ந்து 8வது வர்த்தக தினமாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 185 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் வட்டி விகித உயர்வுகளின் வேகத்தை குறைப்பதாக சுட்டிக்காட்டினார் இது சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்றத்தை ஏற்படுத்தியது. அதன் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,074 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,412 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.289.88 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.1.33 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 184.54 புள்ளிகள் உயர்ந்து 63,284.19 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 54.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,812.50புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment