பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம் … சென்செக்ஸ் 177 புள்ளிகள் அதிகரிப்பு ..

by Lifestyle Editor

தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது. சென்செக்ஸ் 177 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும், தேவையை அதிகரிக்க பிராப்பர்டி டெவல்ப்பர்களை ஆதரிக்க சீனா முடிவு செய்தது போன்ற தகவல்களால் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் சன்பார்மா உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,722 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,756 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 149 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.286.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.19 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 177.04 புள்ளிகள் உயர்ந்து 62,681.84 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 55.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,618.05 புள்ளிகளில் முடிவுற்றது .

Related Posts

Leave a Comment