பாரதிக்கும், கண்ணம்மாவிற்கும் மீண்டும் திருமணமா? திடீர் திருப்பங்களால் அதிர்ச்சி

by Column Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் பல புதிய திருப்பங்கள் அரங்கேறவுள்ளதை புதிய ப்ரொமோ மூலம் தெரியவந்துள்ளது.

வில்லியின் சதி:

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியலாக வலம் வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்று தான் கூற வேண்டும்.

வில்லி வெண்பாவின் சதியினால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு பிரிந்து இருக்கும் குடும்பத்தினை கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளான லெட்சுமி, ஹேமா மூலம் சேர்த்து வைப்பதற்கு பாரதியின் அம்மாவான சவுந்தர்யா போராடி வருகின்றார்.

குழந்தைளால் மீண்டும் திருமணம்:

தற்போது சவுந்தர்யா நினைத்தது இனிவரும் நாட்களில் நடக்க வாய்ப்பிருப்பது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. ஆம் ஏற்கனவே ஹேமா பாரதிக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் நிலையில், இதனை பரபரப்பான ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

குறித்த ப்ரோமோ காட்சியில் ஹேமா ஸ்கூலில் லட்சுமியை அழைத்து உனக்கு அப்பா இல்ல எனக்கு அம்மா இல்ல இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா என்ன என கேட்கிறார். லட்சுமி பதில் என்னவாக இருக்கப்போகிறது? என்ற ட்விஸ்ட்டோடு இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment