சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்கி பொலிவை தரும் கஸ்தூரி மஞ்சள் !!…

by Column Editor

கஸ்தூரி மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெய்யில் கலந்து வைத்து கொள்ளவும். அதனை அடிபட்ட புண்கள் அல்லது சிரங்குகளீன் மீது பூசி வருவதன் மூலமாக விரைவில் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் அலர்ஜி எதிர்ப்பு தன்மை கொண்ட ஒரு பொருளாகும். சருமத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ குணங்களும் இதில் நிறைந்துள்ளன.

கஸ்தூரி மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கி வயது முதிர்வுத் தோற்றத்தைத் தடுக்கிறது.

குப்பைமேனி இலையை அரைத்து, கஸ்தூரி மஞ்சள் பொடியை கலந்து சேற்றுப்புண், நகச்சுத்தி போன்றவற்றின் பூசி வரும் பொழுது, விரைவில் குணமாகிவிடும்.

கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் கற்றாழை சாற்றை கலந்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வேறும் நீரால் கழுவி வரும்பொழுது முகத்தில் ஏற்படும் கருமை, கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்துவிடும்.

Related Posts

Leave a Comment