கடைசி நேர ட்விஸ்ட்.. கோபி – ராதிகா பற்றிய உண்மையை கண்டுப்பிடிக்கும் செல்வி அக்கா!

by Column Editor

பாக்கியலட்சுமி புரமோவை பார்த்த ரசிகர்கள் எபிசோடுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். இன்று ஒளிப்பரப்பாகவுள்ள எபிசோடில் வழக்கம் போல் திருட்டுத்தனம் செய்து கோபி எஸ்கேப் ஆகுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, கடைசி நேரத்தில் வழக்கம் போல் தகிடுதத்தம் செய்து பாக்கியாவிடம் இருந்து தப்பிக்கிறார். அதே நேரம் உண்மை என்ன என்பதை செல்வி பாக்கியாவிடம் சொல்லி, தேவையில்லாமல் திட்டு வாங்கிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நீண்ட நாள் காதலர்களான கோபியும் ராதிகா பாக்கியாவிடம் மாட்ட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த சீரியல் ரசிகர்களின் விருப்பம் என்றே சொல்லலாம். இப்போது ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் திருமணத்திற்கு பிறகும் காதலை தொடரும் கோபி – ராதிகா கதாபாத்திரத்தால் சீரியல் டி. ஆர்.பி எகிறி கொண்டிருக்கிறது. கோபி – ராதிகா திருமண எபிசோடுக்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால் அதற்குள் சீரியல் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் தர நினைத்த இயக்குனர், கோபிமாட்டிக் கொள்வது போல் புரமோ வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டினார்.

புரமோவை பார்த்த ரசிகர்கள் எபிசோடுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். இன்று ஒளிப்பரப்பாகவுள்ள எபிசோடில் வழக்கம் போல் திருட்டுத்தனம் செய்து கோபி எஸ்கேப் ஆகுகிறார். ஆனாலும் கோபி மீது செல்வி அக்காவுக்கு சந்தேகம் வந்து விட்டது. இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது வாங்க பார்க்கலாம்.

ராதிகா வீட்டுக்கும் வரும் பாக்கியாவும், செல்வி அக்காவும் ராதிகா வீட்டில் யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதை பார்த்து விடுகின்றனர். ஆனால் அது கோபி என்று தெரியாது. வழக்கம் போல் டீச்சர் என்ற வார்த்தை கேட்டதும் கோபி ரூமுக்குள் போய் கதவை பூட்டி விடுகிறார். இப்படி இருக்கையில், ராதிகா, கோபியை பாக்கியாவிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என நினைக்கிறார். ஆனால் கோபி வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். இதற்கிடையில் ஆஃபீஸில் மீட்டிங் போல் நடித்து ராதிகாவை ஏமாற்றுகிறார்.

ராதிகா,பாக்கியா மற்றும் செல்வியிடம் தனது திருமணத்தை பற்றி சொல்ல பாக்கியா மாப்பிள்ளை கோபி தான் என தெரியாமல் வாழ்த்தும் சொல்கிறார். செல்வி அக்காவுக்கு மட்டும் சந்தேகம் குறைந்த பாடில்லை. கடைசி வர, கோபி வெளியே வராததால் பாக்கியா வீட்டுக்குள் கிளம்புகிறார். வெளியே வரும் இருவரும் ரோட்டில் கோபி கார் நிற்பதை பார்த்து ஷாக் ஆகுகிறார்கள். உடனே பாக்கியா கோபிக்கு ஃபோன் செய்கிறார். ஆனால் கோபி ஃபோனை எடுக்கவில்லை. இப்படி இருக்கையில் செல்வி அக்கா, ராதிகாவின் ஃபாய் ஃபிரண்ட் ஒருவேளை கோபியா இருக்குமோ என சொல்ல, அவ்வளவு தான் பாக்கியாவுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறார். செல்வி அக்கா சொல்வது உண்மை என்பது கூட தெரியாமல் கோபத்தில் கண்டப்படி அவரை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். நடு ரோட்டில் செல்வி அக்காவை விட்டுட்டு பாக்கியா வீட்டுக்கு செல்கிறார்.

Related Posts

Leave a Comment