ஐஸ்வர்யாவால் வரும் புதுப்பிரச்சனை… சண்டை போடும் மீனா – முல்லை!

by Column Editor

பாண்டியன் ஸ்டோர்ஸ் , மீனாவுக்கு கோபம் வந்து விடுகிறது. இந்த விஷயத்தில் முல்லை ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்த பிரச்சனையை கொண்டு வந்து இருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த முறை ஐஸ்வர்யாவால் முல்லையும் மீனாவும் சண்டை போட்டு கொள்கின்றனர்.

மாசத்தில் 30 நாட்களும் விசேஷ மூடிலே ஒளிப்பரப்பாகும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். வரிசையாக இந்த சீரியலில் கொண்டாட்டங்களை பார்க்கலாம். திருமணம்,சீமந்தம், பெயர் சூட்டு விழ, காது குத்து பிறந்த நாள் என குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அடிக்கடி ஒன்று சேர்ந்து விழாக்களை கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழா முடிந்தது. பல்வேறு போரட்டங்களுக்கு பிறகு இந்த கடை திறப்பை நடத்தி காட்டியுள்ளனர் பாண்டியன் பிரதர்ஸ். அதனால் தான் என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை குடும்ப குடும்பமாக பலரும் பார்த்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வீட்டில் புது பிரச்சனை வருகிறது. ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்த நாள் முதல் எதாவது ஒரு பிரச்சனையை வீட்டுக்கு கொண்டு வந்துவிடுவார். தற்போது புது பிரச்சனையை கொண்டு வருகிறார். இதனால் மீனாவும் முல்லையும் சண்டை போட்டு கொள்கின்றனர். இன்றைய எபிசோடில் ஜீவாவுக்கு அட்வைஸ் செய்கிறார் தனம் அண்ணி. நேற்றைய தினம் ஜீவா குடித்து விட்டு வீட்டில் ரகளை செய்ய மொத்த குடும்பமும் ஆடி போனது. காலையில் ஜீவாவை எல்லோரும் சேர்ந்து கலாய்க்க, கடைசியில் தனம் அண்ணி இனிமேல் இந்த பழக்கமே கூடாது என்று ஜீவாவுக்கு அட்வைஸ் செய்கிறார்.

அதற்குள் ஐஸ்வர்யா, இனிமேல் காலேஜ் போக மாட்டேன் என்று தனத்திடம் சொல்ல, அவருக்கு கோபம் வந்து விடுகிறது. படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை தனம் எடுத்து சொல்லியும் ஐஸ்வர்யா கேட்பதாக இல்லை. பதிலுக்கு பதில் பேசுகிறார். அதுமட்டுமில்லை கண்ணன் காலேஜ் போகட்டும், நான் கடைக்கு போறேன் என்கிறார். இதை கேட்டு மீனா, முல்லை, தனம் எல்லோருக்கும் கோபம், வருகிறது. கடைசியில் மீனா , ஐஸ்வர்யாவை குத்தி காட்டி பேசியது, பாக்கெட் மணி வாங்கிய விஷயத்தையும் ஐஸ்வர்யா நக்கலாக சொல்ல, மீனாவுக்கு கோபம் வந்து விடுகிறது. இந்த விஷயத்தில் முல்லை, ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்கிறார்.

தனம் எவ்வளவு சொல்லியும் ஐஸ்வர்யா தனது முடிவை மாற்றிக் கொள்ள போவதில்லை என்கிறார். இந்த நேரத்தில் தான் முல்லையும் மீனாவும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதை தாங்க முடியாமல் தனம் பொங்கி வெடிக்கிறார். மூர்த்தியிடமும் இந்த பிரச்சனை செல்கிறது. என்ன சொல்ல போகிறார் மூர்த்தி என்பது நாளைக்கு தெரிந்து விடும்.

Related Posts

Leave a Comment