பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து ஆர்யன் விலக இதான் காரணமா?

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வந்த ஆர்யன், சமீபத்தில் அதிலிருந்து விலகினார்.

பாக்கிய லட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வந்த ஆர்யன் விலகியதற்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது.

விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் ஆர்யன், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்த ராதிகாவுடன் நெருக்கம் காட்ட, ஒரு கட்டத்தில் திருமணம்செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. இதற்காக பாக்யாவை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பாக்யா எப்படி தாங்கிக் கொள்வாள், ராதிகாவை கோபி திருமணம் செய்துக் கொள்வானா? என்ற ரீதியில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியலின் கதை சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வந்த ஆர்யன், சமீபத்தில் அதிலிருந்து விலகினார். தற்போது அதற்கான காரணம் வெளியாகியிருக்கிறது. அதாவது விஜய் டிவி-யில் மிகவும் பிரபலமான சீரியலான கனா காணும் காலங்கள் தொடர், விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதில் ஆர்யன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினாராம்.

தவிர தற்போது அந்த சீரியலில் செழியனாக விகாஷ் சம்பத் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment