பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு.. சென்செக்ஸ் 366 புள்ளிகள் வீழ்ச்சி

by Column Editor

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு, சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர்கிரிட் மற்றும் டெக்மகிந்திரா உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. டி.சி.எஸ். பங்கின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,034 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,286 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 120 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.251.07 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 366.22 புள்ளிகள் குறைந்து 55,102.68 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 107.90 புள்ளிகள் சரிவு கண்டு 16,498.05 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment