அந்த ஒரு விஷயத்துக்காக ஐஸ்வர்யாவை பார்த்து பொறாமை படும் மீனா!

by Column Editor

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவுக்கு ஐஸ்வர்யா மீது பொறாமை வருகிறது. காரணம், மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வர, கண்ணன் சர்பிரைஸ் கொடுக்க, ஜீவா மீனாவின் பிறந்த நாளை மறந்துவிட்டு தூங்கி விடுகிறார்.

குடும்பங்கள் கொண்டாடும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதலிடத்தில் இருக்கிறது. கூட்டு குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த தொடரின் மையக்கரு. அதை வைத்தே கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிக்கரமாக சீரியலை வழங்கி கொண்டிருக்கிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனர். டி.ஆர்.பியில் இந்த சீரியலுக்கு நல்ல ரேட்டிங். குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் , சின்ன சண்டைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் என எந்த ஒரு நெகட்டிவிட்டியும் இல்லாமல் இந்த சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய எபிசோடில் மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வருகிறது. நேற்றைய தினமே, மீனாவுக்கு மிகப் பெரிய சர்ப்பிரைஸ் செய்ய வேண்டும் என ஜீவா பிளான் செய்து இருந்தார். ஆனால் கடைசியில் எல்லாமே சொதப்பல். மீனாவுக்கு விஷ் செய்யாமல் படுத்து தூங்கி விட்டார். இதனால் மீனா செம்ம கடுப்பில் இருக்கிறார். ஆனால் கண்னன், ஐஸ்வர்யாவுக்கு 12 மணிக்கு விஷ் பண்ணி கிஃப்ட் கொடுக்கிறார். மறுநாள் காலை ஐஸ்வர்யா இந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்ல, மீனாவுக்கு பொறாமை வந்து விடுகிறது.

தனம் அண்னி இருவருக்கும் ஒரே மாதிரி புடவை எடுத்து கிஃப்ட் கொடுக்கிறார். அதிலும் மீனாவுக்கு பெரிய சந்தோஷம் இல்லை. கதிர், ஐஸ்வர்யாவுக்கு 500 ரூபாய் கொடுத்து வாழ்த்துக்களை சொல்கிறார். இதை எல்லாம் பார்த்த மீனாவுக்கு முகம் மாறி விடுகிறது. காலையில் ஜீவா விஷ் செய்வார் என மீனா எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஜீவா அவசர வேலைக்காக கடைக்கு கிளம்பி விடுகிறார். ஆனால், கண்ணன், ஐஸ்வர்யாவை கோயிலுக்கு அழைத்து செல்லமீனாவுக்கு இன்னும் கோபம் வருகிறது.

இதற்கு நடுவில் மீனாவின் அப்பாவும் அம்மாவும் ஃபோன் செய்து பேசுகிறார்கள். மன கவலையில் மீனா சோகமாக பேசுகிறார். உடனே இருவரும் வீட்டுக்கு கிளம்பி வருவதாக கூறுகின்றனர். அத்துடன் சீரியலும் முடிகிறது.

Related Posts

Leave a Comment