பிக்பாஸ் விதியை மீறும் வனிதா.. கமலிடம் போட்டுக்கொடுத்த சுஜா வருணி !

by Column Editor

டாஸ்க் விளையாடும்போது பிக்பாஸ் விதியை வனிதா பின்பற்றுவதில்லை என்று கமலிடம் சுஜா வருணி சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய தினத்தின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் சுஜாவருணியிடம் வனிதா குறித்து கமல் விசாரிக்கிறார். அதில் பேசும் சுஜா வருணி, பிக்பாஸ் விதியை மீறி அவங்களுக்கென்று சிலர் ஒரு விதியை போடுவதாக கமலிடன் கூறுகிறார். அப்போது குறுக்கிடும் கமல், சிலர் என்பது யார் என்று கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் சுஜா வருணி, சிலர் என்பது வனிதா மேடம் மட்டும்தான் என்கிறார்.

சுஜா வருணியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கும் வனிதா, பிக்பாஸ் விதியை எதையும் நான் மீறவில்லை என்றும் அவங்க சொல்வதை நான் ஒத்துக்க மாட்டேன் என்றும் கூறுகிறார். டாஸ்க் விளையாடும்போது வனிதா பயந்துட்டாங்க சார். அதுதான் உண்மை என சுஜாவருணி கூறுகிறார்.

இதற்கு கமலிடம் விளக்கமளிக்கும் வனிதா, டாஸ்க்கின்போது யாரும் விதியை பின்பற்றவில்லை என்பதை சொன்னதே நான்தான். இதையடுத்து வனிதா மற்றும் சுஜா வருணி வாக்குவாதம் காட்சிகள் காட்டப்படுகிறது. இதனால் டென்ஷனாகும் சுஜாவருணி கோபித்துக்கொண்டு செல்லும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment