மீண்டும் பிக்பாஸில் தாமரைச்செல்வி.. ரசிகர்கள் உற்சாகம் !

by Column Editor

ஒடிடியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் தாமரைச்செல்வி கலந்துக்கொள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் மனம் கவர்ந்த 18 போட்டியாளர்கள் கலைந்துக்கொண்டனர். கடைசியாக இந்த நிகழ்ச்சியின் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோன்று பிரியங்கா ரன்னரானார்.

பிக்பாஸ் சீசன் 5 நிறைவுபெற்றவுடன் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித்தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி புதியதாக தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, கஞ்சா கருப்பு, அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட 13 பேர் பங்கேற்க உள்ளனர்.

சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியானது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்ற தாமரை கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடக கலைஞராக இருந்துள்ளார் . நாடக கலைஞராக தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்துவிட்டார். கடந்த சீசனில் தாமரைச்செல்வி விளையாடி விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment