ஜாமீனில் வரும் வெற்றி.. அபியின் அடுத்த முயற்சி! பரபரப்பான திருப்பத்தில் தென்றல் வந்து என்னை தொடும்!

by Column Editor

வெற்றி கொலை வழக்கில் சிக்குகிறார். இந்த விஷயத்தில் வெற்றி பக்கம் நியாயம் இருப்பது அபிக்கு தெரியாது.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் சமீபத்திய புரமோ ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தென்றல் வந்து என்னை தொடும் பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக மறிவிட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் மின்னல் வேகத்தில் செல்லும் திரைக்கதை. அடுத்தடுத்த ட்விஸ்டுகளால் சீரியல் நல்லடி.ஆர்.பி ரேட்டிங்கில் செல்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். அதற்கு காரணம், வெற்றி – அபிநயா லவ் டிராக் தான். இந்த சீரியலை இயக்குனர் இப்படியே கொண்டு போக வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதை புரிந்து கொண்ட இயக்குனர் வாரத்துக்கு ஒருமுறை திரைக்கதையில் ட்விஸ்ட் வைத்து சீரியலை ஸ்பிடாக எடுத்து செல்கிறார்.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் சமீபத்திய புரமோ ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தென்றல் வந்து என்னை தொடும் பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக மறிவிட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் மின்னல் வேகத்தில் செல்லும் திரைக்கதை. அடுத்தடுத்த ட்விஸ்டுகளால் சீரியல் நல்லடி.ஆர்.பி ரேட்டிங்கில் செல்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். அதற்கு காரணம், வெற்றி – அபிநயா லவ் டிராக் தான். இந்த சீரியலை இயக்குனர் இப்படியே கொண்டு போக வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதை புரிந்து கொண்ட இயக்குனர் வாரத்துக்கு ஒருமுறை திரைக்கதையில் ட்விஸ்ட் வைத்து சீரியலை ஸ்பிடாக எடுத்து செல்கிறார்.

விருப்பமே இல்லை என்றாலும் ஊருக்காக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர் அபியும் வெற்றியும். அபிநயா வெளிநாட்டில் சென்று படித்தவர். சீரியலின் நாயகனான வெற்றியை திருத்தி அவனுடன் சேர்ந்து வாழ முடிவு எடுக்கிறார் . இதற்காக தனது வீட்டை எதிர்த்து வெற்றி வீட்டுக்கு வந்தார். இதனால் அபி மீது அவரின் அப்பா மற்றும் அண்ணன்களுக்கு பயங்கர கோபம். அதே நேரம் வெற்றி வீட்டில் படி படியாக மொத்த குடும்பமும் அபியை ஏற்றுக் கொண்டு விட்டனர். வெற்றி மட்டும் இன்னும் அபியை ஏற்றுக் கொண்டு சேர்ந்து வாழவில்லை.இதற்கிடையில் கெட்டவர்களை அழிக்க நல்லவர்களுக்காக ரவுடிசம் செய்கிறார் வெற்றி. இவரை திருத்தி நல்லவராக மாற்றி சேர்ந்து வாழுவேன் என சபதம் எடுக்கிறார். அதன்படி தான் தற்போது வரை வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தான் வெற்றி கொலை வழக்கில் சிக்குகிறார். இந்த விஷயத்தில் வெற்றி பக்கம் நியாயம் இருப்பது அபிக்கு தெரியாது. அதே சமயம் வெற்றி, அந்த வில்லனை ரோட்டில் போட்டு அடித்ததை அபி நேராக பார்த்ததால், வெற்றிக்குஎதிராக கோர்டில் சாட்சி சொல்கிறார். இதனால் வெற்றி ஜெயிலுக்கு செல்லும் நிலைமை வந்துவிட்டது. இனிமேல் வெற்றி வாழ்க்கை அவ்வளவு தான் என நினைத்து கொண்டிருந்தனர் குடும்பத்தினர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக அபியின் மீது கோபத்தில் இருக்கும் அப்பா, நீதிபதி வெற்றி வழக்கில் நேராக ஆஜராகி வாதிடுகிறார். இது அபிக்கும் மிகப் பெரிய ஷாக் தான்.

அவரின் வாதம் வெற்றியில் முடிய, கோர்டில் வெற்றிக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. எந்த தாலி சென்டிமெண்டை வைத்து அபி வீட்டை விட்டு வெளியே வந்தாரோ அதே சென்டிமெண்டை வைத்து அவரின் அப்பா கோர்டில் அபியை மடக்கி வெற்றிக்கு ஜாமீன் வாங்கி தந்துவிடுகிறார். இனி நடக்க போவது என்ன? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment