செந்திலின் காலேஜ்க்கு போன அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட் !

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். செந்தில் அமுதாவிடம் பொய் சொல்லி விட்டு காலேஜ்க்கு பெயிண்ட் டப்பாக்களை மறைத்து எடுத்து சென்றதால் அமுதா கோபம் அடைந்தாள்.

இதனையடுத்து காலையில் அமுதா காலேஜுக்கு வர உறங்கி கொண்டிருக்கும் செந்திலை அமுதா எழுப்பி திட்டுகிறாள். அதன்பிறகு காம்படிஷனில் வெற்றி பெற்றவர்களை அறிவிக்க போவதாக சொல்ல, கூட இருந்தவர்கள் வாங்க என அமுதாவையும் செந்திலையும் அழைத்து செல்கின்றனர்.

அனைவரும் ஓவியத்தை காட்ட, செந்திலிடம் ஓவியம் எங்கே என கேக்க, மாடியிலிருந்து ஒரு ஸ்கீரின் கீழே வருகிறது. அதில் செந்தில் அமுதாவை கையில் வாளுடன் ராணி போல வரைந்திருக்கிறான். அமுதா அதைப் பார்த்து விட்டு இன்ப அதிர்ச்சி அடைகிறாள்.

அதன் பிறகு செந்தில் அமுதாவிடம் நடந்தவற்றை சொல்ல அமுதா எதுவும் பேச முடியாமல் மௌனமாய் இருக்கிறாள். இந்த நேரத்தில் முதல் பரிசு செந்தில் என அறிவிப்பு வருகிறது, மேலும் இத நாங்க அவர் கையில் கொடுக்க போறதில்லை என அந்த ஓவியத்தை அழகாக்குன அமுதாவே இங்க இருக்காங்க.. அவங்க வாங்குறது தான் சிறப்பு என சொல்ல செந்தில் அமுதா பார்த்து போ என்பது போல சொல்ல அமுதா சென்று வாங்குகிறாள்.

பிறகு அமுதா அடகு கடைக்காரனிடம் போன் செய்து ஏலம் நாளைக்கு தானே என கேட்கிறாள். அடுத்து ஆட்டோவில் அமுதா ஏலம் விடும் இடத்திற்கு வந்து கொண்டிருக்க உமா 2 மணின்னா 2 மணிக்கு தான் ஆரம்பிப்பீங்களா அவ எல்லாம் வரமாட்டா நீங்க ஏலத்தை ஆரம்பிங்க என சொல்ல, சுற்றி இருப்பவர்களும் கூச்சலிட ஏலம் ஆரம்பிக்கிறது.

அன்னத்தின் தாலியை ஏலம் விட ஒருவன் கை உயர்த்தி வாங்குகிறான். அமுதா வருவதற்கு முன்பாகவே ஏலம் முடிந்து போக உமா அமுதாவை கலாய்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment