எல்லாமே நடிப்பா? விஜய் டிவி பிரியங்கா பற்றிய உண்மையை பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டுடைத்த தாமரை!

by Column Editor

பிரியங்கா குறித்து நெகடிவ் கமெண்டுகளை பெருக்க தான் தாமரை இப்படி பேசுகிறார் என்று பிரியங்காவின் ஆர்மி அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை செல்வி, விஜய் டிவி பிரியங்கா பற்றி பேசிய வீடியோ வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அப்படி என்ன சொன்னார் தாமரை, வாங்க பார்க்கலாம்

பிக் பாஸ் சீசன் 5 முடிந்தாலும் அதுக் குறித்த பேச்சுகள் ஓய்ந்த பாடில்லை. போதாத குறைக்கு இபோது பிக் பாஸ் அல்டிமேட் வேற தொடங்கி விட்டது. அதில் பிக் பாஸ் 5ல் கலந்து கொண்ட நிரூப், ஸ்ருதி, அபிநய், தாமரை ஆகியோர் உள்ளனர். இவர்கள் எதாவது ஒரு இடத்தில் தங்களை அறியாமலே மீண்டும் மீண்டும் பிக் பாஸ் 5 பற்றி பேசுவது அவர்களுக்கே தெரியாமல் கண்டெண்ட் ஆகிவிடுகிறது. அப்படி தான் நேற்றைய எபிசோடில் பிரியங்கா பற்றி, அனிதா சம்பத்திடம் தாமரை செல்வி பேசிய விஷயம். ஏற்கெனவே பிரியாவுக்கு எதிராக ஏகப்பட நெகடிவ் கமெண்டுகள் உலா வர, அதை இன்னும் சுவாரசியமாக மாற்றி இருக்கிறார் தாமரை.

பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் இருக்கும் போதே தெரியும் தாமரைக்கும் பிரியங்காவுக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று. டாஸ்கில் எப்போதுமே இரண்டு பேரும் அடித்துக் கொள்வார்கள். டாஸ்க் முடிந்த உடனே பிரியங்காவும் தாமரையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொள்வார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கடுப்பை வர வைத்தது. ஏன், ஒருமுறை கமல் கூட இதைப் பற்றி ஜாட மாடையாக பேசி இருப்பார்.

இந்நிலையில் மீண்டும் பிரியங்கா பற்றி குறை பாட்டு பாடியுள்ளார் தாமரை. பிரியங்காவின் உண்மையான முகத்தை வெளியில் வந்த பின்பு தான் தெரிந்துக் கொண்டதாகவும், அவர் உள்ளே காட்டிய பாசம் எல்லாம் நடிப்பு என்று தாமரை கூறியுள்ளார். கார்டன் ஏரியாவில் அனிதாவிடம் இதுப் பற்றி மன விட்டு பேசிய தாமரை, “பிக் பாஸ் சீசன் 5 முடிந்த உடனே பிரியங்கா என்னை கண்டுகொள்ளவில்லை. அவர் பெரிய பிரபலம் என்பதால் என்னிடம் அவர் நம்பர் இல்லை.ஆனால் அவர் நினைத்து இருந்தால் ஈஸியாக என் நம்பரை வாங்கி என்னிடம் பேசி இருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அதுமட்டுமில்லை உள்ளே அக்கா, அக்கா என பாசமாக நடந்து கொள்வார். ஆனால் பிக் பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் நான் போய் பேசி கூட அவர் சரியாக பேசவில்லை.

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது உன்னை நான் அப்படி மாற்றுவேன், உன்னை அங்க கூட்டிட்டு போறேன். இங்க கூட்டிட்டு போறேன் என்றார். ஆனால் வெளியில் போன பிறகு என்னை மறந்து விட்டார். ஆனால் நான் பிக் பாஸ் வீட்டை என் குடும்பமாக தான் பார்த்தேன். பிரியங்கா பசிக்குதுன்னு சொன்னால் என்னால் தாங்க முடியாது. அதே நேரம், அக்‌ஷரா வீட்டுக்குள் சொன்னதை வெளியில் போயும் செய்தார். எனக்கு ட்ரெஸ்களை வாங்கி அனுப்பினார். வெளியில் வந்த உடனே ஃபோன் செய்து பேசினார். பிக் பாஸ் சீசன் 5ல் நான் நிறைய கத்துக்கிட்டேன் இனிமே அன்ப காட்டி என்ன ஏமாத்த முடியாது. நான் கேம் விளையாடுவேன்” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தாமரை செல்வி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லை பிரியங்கா குறித்து நெகடிவ் கமெண்டுகளை பெருக்க தான் தாமரை இப்படி பேசுகிறார் என்று பிரியங்காவின் ஆர்மி அதற்கு பதில் அளித்தும் வருகின்றனர்.

Related Posts

Leave a Comment