சென்செக்ஸ் 143 புள்ளிகள் வீழ்ச்சி…

by Column Editor

தொடர்ந்து 2வது தினமாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தம் நிலையில்லாமல் ஏற்ற இறக்கம் நிலவியது.இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,593 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,744 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 95 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.267.62 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.72 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 143.20 புள்ளிகள் குறைந்து 58,644.82 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 43.90 புள்ளிகள் சரிவு கண்டு 17,516.30 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment