சுந்தரி சீரியல் கேப்ரில்லா வாழ்க்கையில் கண்டிப்பாக இது மகிழ்ச்சியான தருணம்! அப்படி என்ன நடந்தது தெரியுமா?

by Column Editor

சுந்தரியின் நடிப்பால் அந்த வாரம் டி.ஆர்.பியில் சுந்தரி சீரியல் தான் டாப்.

டிக் டாக் மூலம் கிடைத்த வாய்ப்பினால் தனது திறமையால் சின்னத்திரை வெள்ளித்திரையில் சிக்சர் அடித்துக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் புகழ் கேப்ரில்லா வாழ்க்கையில் முக்கியமான தருணம் ஒன்று அரங்கேறியுள்ளது.

எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்கள் மீது நிறம் குறித்த கருத்து உள்ளது. அதிலும் சினிமாவில் முதலில் அவர்களின் தோற்றம் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதுப்போன்ற பல விமர்சனங்களை கடந்து வந்து நின்று தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறார் கேப்ரில்லா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது காமெடி திறமையை வெளிப்படுத்த மேடை ஏறினார். தொடர்ந்து டிக் டாக்கில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் வாய்ப்புகள் தேடி அலைந்தார். அப்போதெல்லாம் அவரிடம் திறமை இருந்தும் நிறத்தை காரணம் காட்டி அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.

ஆனால் திறமை ஒருநாள் கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்பியவருக்கு நயன்தாராவின் ஐரா பட வாய்ப்பு தேடி வந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுக்களை வாங்கி தந்தது. அதன் பின்பு அவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாறியது.தொடர்ந்து பல படங்களில் துணை ரோல்களில் நடித்தார். சன் டிவியில் சுந்தரி சீரியலில் லீட் ரோல் என்ட்ரி கொடுத்தார். இந்த கதாப்பாத்திரமும் நிறத்தால் பின் தங்காமல் சாதிக்கும் சுந்தரி என்ற பெண்ணின் சுயமரியாதை கதை தான். இந்த வாய்ப்பையும் கேப்ரிலாவுக்கு வாங்கி கொடுத்தது அவரின் நிறம் தான். தற்போது சுந்தரி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கேப்ரில்லாவின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

குறிப்பாக கார்த்திக்,சுந்தரியைஏமாற்றி அனுவை திருமணம் செய்து கொண்ட உண்மை தெரிய வந்த பின்பு சுந்தரியின் நடிப்பால் அந்த வாரம் டி.ஆர்.பியில் சுந்தரி சீரியல் தான் டாப். நடிப்பில் கலக்கி வரும் கேப்ரில்லா இன்ஸ்டாவில் படு ஆக்டிவ். அவ்வப்போது லைவிலும் கலந்துரையாடுவார். ரீல்ஸ்களை வெளியிடுவார்.

இந்நிலையில், ஆஸ்கார் புகழ்ஏ.ஆர் ரகுமான் சுந்தரியை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார். இதை அவரே உறுதி செய்து, “இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் சார்.. இப்படி ஒரு பெருமை எனக்கா” என ஆச்சரியத்துடனும் வியப்புடனும் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்கார் புகழ் ஏ.ஆர் ரகுமான் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ். அதிலும் இன்ஸ்டாவில் அவரை பல மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர். பதிலுக்கு அவர் ஒரு சில நபர்களை, நட்சத்திரங்களை மட்டும் தான் ஃபாலோ செய்கிறார். அதில் சுந்தரி கேப்ரில்லாவும் ஒருவர். இது கண்டிப்பாக கேப்ரில்லா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் என பூரிப்பு அடைகின்றனர் சுந்தரி கேப்ரில்லாவின் ரசிகர்கள்.

Related Posts

Leave a Comment