சென்னை புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி..

by Column Editor

சென்னையில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் 45வது புத்தக கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகமல் தேங்கிக் கிடப்பதாக பபாசி துணைத் தலைவர் மயில்வேலன், முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த 45வது புத்தக கண்காட்சியில் 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் , கைக்குழந்தைகளுடன் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவுச் சீட்டு கொடுக்கலாம் என்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment