லட்சுமிக்கு உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா… அடுத்த கட்டத்துக்கு நகரும் பாரதி கண்ணம்மா!

by Column Editor

கண்ணம்மாவின் அடுத்த சபதமான பிறந்த நாள் விழாவில் லட்சுமி அப்பா பெயரை ஊர் முன்னாடி சொல்கிறேன் என்ற சபத்தை நிறைவேற்றும் நாள் வந்துவிட்டது.

பாரதி கண்ணம்மா சீரியலில் சபத்தை நிறைவேற்ற முதல் படியை எடுத்து வைத்து விட்டார் கண்ணம்மா. இனிமேல் வெண்பாவுக்கும் பாரதிக்கும் தொல்லையாக இருக்க போவது கண்ணம்மா தான்.

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் ரீ எண்ட்ரிக்கு பிறகு சீரியல் வழக்கம் போல் சூடுப்பிடிக்க தொடங்கி விட்டது . பாரதி மீண்டும் வெண்பாவை ஏற்றுக் கொண்டது கண்ணம்மாவுக்கு கோபத்தை தந்ததோ இல்லையோ ரசிகர்கள் எரிச்சல் ஆகினர். இந்நிலையில் தான் மீண்டும் கண்ணம்மாவை அசிங்கப்படுத்த இந்த நேரத்தை பயன்படுத்தில் பாரதியுடன் நெருக்கம் காட்ட வெண்பா பிளான் செய்தார். அந்த பிளான் படி பாரதியை வீட்டில் தங்க வைக்க தயாரானார். பாரதியும் இதற்கு சம்மதிக்க, ஆர்வ கோளாறில் வெண்பா, கண்ணம்மா வீட்டுக்கு சென்று இருவரையும் 2மாதத்தில் பிரிப்பதாக சபதம் போட்டார்.

ஆனால் கடைசியில் வெண்பாவின் சபதம், கண்ணம்மாவின்சபதமாக மாறி 2 மாசம் என்ன? ஒரே நாளில் உங்களை பிரிக்கிறேன் என்றவர், சொன்னப்படியே வெண்பா வீட்டுக்கு போன பாரதியை அடுத்த சில நிமிடங்களில் திரும்பவும் வீட்டுக்கு செல்ல வைத்தார். கண்ணம்மாவின் இந்த செயல் வெண்பாவுக்கு கோபத்தை தர, வழக்கம் போல் கத்தி கூச்சலிடுகிறார்.

அசிங்கப்பட்ட கோபத்தில் பாரதியும் வேக வேகமாக வீட்டுக்குள் செல்கிறார். இதுமட்டுமில்லை, கண்ணம்மாவின் அடுத்த சபதமான பிறந்த நாள் விழாவில் லட்சுமி அப்பா பெயரை ஊர் முன்னாடி சொல்கிறேன் என்ற சபத்தை நிறைவேற்றும் நாளும் வந்துவிட்டது. இந்த முறை கண்ணம்மாவின் பிறந்த நாளை பெரியதாக கொண்டாட லட்சுமியும், ஆட்டோக் கார குமார் அண்ணாவும் பிளான் செய்கிறார்கள். அதற்கு காரணம் கண்ணம்மா உண்மையை சொல்ல போவது தான். ஒருவேளை கண்ணம்மா எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டால் சீரியல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து விடும். வழக்கம் போல் இயக்குனர் ட்விட்ஸ்ட் வைத்தால் மீண்டும், ரசிகர்களுக்கு கோபம் தான் வரும்.

Related Posts

Leave a Comment