பிரியங்கா ஏன் வர வில்லை…. உண்மையை உடைத்த நிரூப்! சுரேஷ் சக்ரவர்த்தி அதிரடி கேள்வி

by Column Editor

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது.

இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவருமே ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் என்பதால், விளையாட்டின் நுணுக்கங்களை நன்று அறிந்து இருக்கிறார்கள்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக ஷாரித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் நாளே போட்டியாளர்கள் மிகவும் கவனமாக விளையாடுகின்றனர்.

தேவை இன்றி பேசாமல், அளவுடன் பேசி வருகிறார்கள். வழக்கமாக அனைத்து பிரச்சினைகளுக்கும் கொம்பு சுத்தும் சுரேஷ் சக்ரவத்தி கொஞ்சம் அடக்கிவாசிப்பது போல தெரிகிறது.

இந்த நிலையில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த சீசனில் யாரை மிஸ் பண்ணுறீங்க என்று நிரூப்பிடம் கேள்வி கேட்டார்.

அவர் நான் பிரியங்காவை தான் மிஸ் பண்ணுரன்.

காரணம் அவ எங்க இருந்தாலும் அந்த இடம் மகிழ்ச்சியாக இருக்கும். அவளை தான் மிஸ் பண்ணுறன் என்றார்.

அப்போது ஏன் அவங்க பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று சுரேஷ் சக்ரவர்த்தி கேட்டார்.

சூப்பர் சிங்கர் ஆரம்பிப்பதால் வரவில்லை என்று நினைக்கிறேன் என்றார். இல்லை என்றால் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு அவர் வருகை தந்திருப்பார் என குறிப்பிட்டார்.

Related Posts

Leave a Comment