சென்செக்ஸ் 77 புள்ளிகள் குறைந்தது…முதலீட்டாளர்களுக்கு ரூ.98 ஆயிரம் கோடி லாபம்

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 77 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் வர்த்தகத்தின் பிற்பகுதியில் பங்கு வர்த்தகம் மளமளவென சரிவை சந்தித்தது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி. மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி மற்றும் டெக்மகிந்திரா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,988 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,364 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 106 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.261.09 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.98 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.71 புள்ளிகள் குறைந்து 57,200.23 புள்ளிகளில் நிலை நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 8.20 புள்ளிகள் சரிவு கண்டு 17,101.95 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment