கோபியின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முடிவு கட்டும் பாக்கியாவின் மாமனார்!

by Column Editor

ராதிகா மற்றும் கோபியின் திருமணத்தை நடத்தி விட வேண்டுமென்று ராதிகாவின் அம்மா முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் தகிடுதத்தம் முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது. இதனால் சீரியலில் அடுத்தக்கட்ட ட்விஸ்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சின்னத்திரை சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகள் மட்டும் விரும்பி பார்க்கக்கூடிய காலம் மாறி போய் இப்போது அனைத்து தரப்பினரும் சீரியல்களை விரும்பி பார்க்க தொடங்கி விட்டனர். அதிலும் இந்த கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஆண்கள் கூட இப்போது சீரியல் ரசிகர்கள் தான். அதனால் சீரியல் குழுவும் விதவிதமான கதையில், ஏகப்பட்ட ட்விஸ்டுகள் புதிய கோணத்தில் சீரியல்களை ஒளிப்பரப்பி வருகின்றன. காதல், ரொமான்ஸ், ஃபேமலி என்ற பாணியில் சில சீரியல்கள், நகைச்சுவை, செண்டிமெண்ட், துரோகம், ஏமாற்றம் என்ற ஒன்லைனில் சில சீரியல்களும் முன்னணி டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

அதில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சிரீயல். திருமணத்திற்கு பிறகு குடும்பத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் இல்லத்தரசியின் கதையை அடிப்படையாக கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

மனைவியை கொஞ்சம் கூட மதிக்காத கணவர் கோபி, குடும்பத்திற்கு தெரியாமல் தனது பழைய காதலியுடன் மிகவும் நெருங்கி பழகி வருவது போன்ற கதைக்களத்தால் சீரியலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

கோபிக்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவருடைய பெண் தோழியான ராதிகாவுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து அவரும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். இந்த நிலையில் பொய் வசனங்களை பேசி ராதிகாவின் மனதில் கோபி இடம் பிடிக்கிறார். அதில் வெற்றியும் காண்கிறார். மனைவிக்கு தெரியாமல் ராதிகாவை சந்தித்து பேசுவது அவர்களுடன் தீபாவளி கொண்டாடுவது , வீட்டில் பொய் சொல்லி ஏமாற்றுவது என கோபியின் நடிப்புக்கு பயங்கர ஃபேன்ஸ்.

இந்நிலையில் தற்போது சீரியல் களம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கோபி மற்றும் ராதிகா பற்றிய உண்மை ஏற்கெனவே கோபியின் அப்பாவுக்கு தெரிந்து விட்டது. அவரும் கோபியை வார்னிங் செய்து விட்டார். இதற்கிடையில் மகளின் பெயர் கெட்டு போக கூடாது என ராதிகா மற்றும் கோபியின் திருமணத்தை நடத்தி விட வேண்டுமென்று ராதிகாவின் அம்மா முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். கோபியின்பித்தலாட்டம் பாக்கியாவுக்கு இந்தாள் வரை தெரியாது.

ஆனால் இனி அப்படி இல்லை. பாக்கியா வீட்டுக்கு வரும் ராதிகா மகள் மயூவிடம் கோபியின் அப்பா, ராதிகா – கோபிக்குநடக்க போகும் திருமணம் பற்றியும் , கோபி இன்னும் வீட்டுக்கு வருவது பற்றியும் கேட்டறிகிறார். துக்கத்தில் மனமுடைந்து அழுகிறார். அடுத்து அவர் எடுக்க போகும் முடிவு தான் சீரியலின் அடுத்த கட்ட ட்விஸ்ட்.

Related Posts

Leave a Comment